சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
475   சிதம்பரம் திருப்புகழ் ( - வாரியார் # 643 )  

கூந்தலாழ விரிந்து

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தாந்த தானன தந்த தனந்தன
     தாந்த தானன தந்த தனந்தன
          தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான

கூந்த லாழவி ரிந்து சரிந்திட
     காந்து மாலைகு லைந்து பளிங்கிட
          கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ...... கொங்கைதானுங்
கூண்க ளாமென பொங்கந லம்பெறு
     காந்தள் மேனிம ருங்குது வண்டிட
          கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச்
சாந்து வேர்வின ழிந்து மணந்தப
     வோங்க வாகில்க லந்து முகங்கொடு
          தான்ப லாசுளை யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந்
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
     வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு
          சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ...... மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி
     ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
          சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச்
சேண்சு லாமகு டம்பொடி தம்பட
     வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்
          சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே
மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட
     தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு
          வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
     மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்
          வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே.
Easy Version:
கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து
பளிங்கிட கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட
கொங்கை தானும் கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு
காந்தள் மேனி மருங்கு துவண்டிட கூர்ந்த ஆடை குலைந்து
புரண்டு இரசங்கள் பாய
சாந்து வேர்வின்அழிந்து மணம் த(ப்)ப ஓங்கு அவாவில்
கலந்து முகம் கொடு தான் பலா சுளையின் சுவை கண்டு
இதழுண்டு
மோகம் தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட வாஞ்சை
மாதருடன் புளகம் கொடு சார்ந்து நாய் என அழிந்து விழுந்து
உடல் மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி
சங்கொடு சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் பொங்கு
சூரைச் சேண் சுலா மகுடம் பொடிதம் பட
ஓங்கு அவ்வேழ் கடலும் சுவற அம் கையில் சேந்த வேலது
கொண்டு நடம் பயில் கந்த வேளே
மாந் தண் ஆரு(ம்) வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை
கரும்புகள் விஞ்சிடு வான் குலாவு சிதம்பரம் வந்து அமர்
செங்கை வேலா
மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை
மருங்கு பொன் வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய
தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து
பளிங்கிட கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட
... கூந்தல்
தாழ்ந்து விரிவுற்றுச் சரிந்து விழ, ஒளி வீசும் மாலை குலைவுற்று பளிங்கு
போல் விளங்க, கூரியவாள் போன்றும் கெண்டை மீன் போன்றும் உள்ள
கண்கள் கலக்கம் கொள்ள,
கொங்கை தானும் கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு
காந்தள் மேனி மருங்கு துவண்டிட கூர்ந்த ஆடை குலைந்து
புரண்டு இரசங்கள் பாய
... மார்பகங்களும் குன்று போல எழுச்சி
கொள்ள, செழிப்புள்ள காந்தள் பூ போன்ற உடலில் இடை துவண்டு
போக, அவ்விடையைச் சுற்றி வளைத்துள்ள ஆடை குலைவு உற்றுப்
புரண்டு இன்ப ஊறல்கள் பாய்ந்து பெருக,
சாந்து வேர்வின்அழிந்து மணம் த(ப்)ப ஓங்கு அவாவில்
கலந்து முகம் கொடு தான் பலா சுளையின் சுவை கண்டு
இதழுண்டு
... (நெற்றியில் உள்ள) சாந்து வேர்வையினால் அழிந்து
வாசனை கெட, மிக்கு எழும் காதலுடன் சேர்ந்து முகத்தோடு முகம்
கொடுத்து, பலாச் சுளையின் சுவை கண்டது போல் வாயிதழை உண்டு,
மோகம் தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட வாஞ்சை
மாதருடன் புளகம் கொடு சார்ந்து நாய் என அழிந்து விழுந்து
உடல் மங்குவேனோ
... காம ஆசையால் புறா, மயில் ஆகிய
புட்குரலுடன் கொஞ்ச, ஆசை வைத்த விலைமாதர்களுடன்
புளகாங்கிதத்துடன் இணங்கி நாய் போல அழிந்து விழுந்து உடல்
வாட்டம் அடைவேனோ?
தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி
சங்கொடு சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் பொங்கு
சூரைச் சேண் சுலா மகுடம் பொடிதம் பட
... தீந்த தோதக
தந்தன திந்திமி என்ற ஓசையை எழுப்புகின்ற பேரிகை, துந்துபி, சங்கு
இவைகளுடன் சேர்ந்த ஊதுகுழல், பம்பை என்னும் பறை,
பேருடுக்கைகள் இவைகளுடைய ஒலி மிக்கு எழ வந்த சூரனுடைய
உயர்ந்து விளங்கும் கிரீடம் பொடிபட,
ஓங்கு அவ்வேழ் கடலும் சுவற அம் கையில் சேந்த வேலது
கொண்டு நடம் பயில் கந்த வேளே
... விளங்கும் அந்த ஏழு
கடல்களும் வற்றிட, அழகிய கையில் சிவந்த வேலாயுதத்தை ஏந்தி,
(துடிக்) கூத்து ஆடுகின்ற கந்தப் பெருமானே,
மாந் தண் ஆரு(ம்) வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை
கரும்புகள் விஞ்சிடு வான் குலாவு சிதம்பரம் வந்து அமர்
செங்கை வேலா
... குளிர்ச்சி நிறைந்த மாமரச் சோலையில் குயில்
கொஞ்ச, தென்னை, வாழை, கரும்பு ஆகியவை மேலிட்டு எழுந்து
ஆகாயத்தை அளாவும் தில்லையில் வந்து வீற்றிருக்கும் செங்கை
வேலனே,
மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை
மருங்கு பொன் வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய
தம்பிரானே.
... பெருமையும் ஒளியும் கொண்ட மார்பக மலைகளை
உடைய, அழகு வாய்ந்த நாயகி (தேவயானையும்), மின்னல் போன்ற
இடையையும் பொன் உருக்கி வார்த்தது போலுள்ள உருவத்தையும்
கொண்ட குறப்பெண்ணாகிய வள்ளியும் வணங்கிய பெருமாளே.

Similar songs:

475 - கூந்தலாழ விரிந்து (சிதம்பரம்)

தாந்த தானன தந்த தனந்தன
     தாந்த தானன தந்த தனந்தன
          தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான

Songs from this thalam சிதம்பரம்

449 - கனகசபை மேவும்

450 - கைத்தருண சோதி

451 - இருவினையின் மதி

452 - குகனே குருபரனே

453 - வண்டையொத்து

454 - கங்குலின் குழல்

455 - கொந்தளம் புழு

456 - மந்தரமென் குவடார்

457 - வந்து வந்துவித்தூறி

458 - கதித்துப் பொங்கலு

459 - சிரித்துச் சங்கொளி

460 - தத்தையென்று

461 - தனத்தில் குங்குமத்தை

462 - திருடிகள் இணக்கி

463 - கொந்தரம் குழல்

464 - தியங்கும் சஞ்சலம்

465 - பருவம் பணை

466 - மதவெம் கரி

467 - முகசந்திர புருவம்

468 - சந்திர வோலை

469 - காய மாய வீடு

470 - அவகுண விரகனை

471 - கட்டி முண்டக

472 - நஞ்சினைப் போலுமன

473 - செம் கலச

474 - கரிய மேகமெனும்

475 - கூந்தலாழ விரிந்து

476 - அத்தன் அன்னை

477 - இருள் காட்டு

478 - முல்லைமலர் போலும்

479 - அடப்பக்கம் பிடித்து

480 - அக்குப் பீளை

481 - ஆரத்தோடு அணி

482 - காதைக் காதி

483 - கொள்ளை ஆசை

484 - தாது மாமலர்

485 - எலுப்புத் தோல்

486 - நீல மாமுகில்

487 - வாத பித்தமொடு

488 - சுரும்பு உற்ற

489 - இணங்கித் தட்பொடு

490 - விடுங்கைக்கு ஒத்த

491 - கொந்தள வோலைகள் ஆட

492 - நகையா லெத்திகள்

493 - எழுகடல் மணலை

494 - தறுகணன் மறலி

495 - இரசபா கொத்தமொழி

496 - இருளும் ஓர்கதிரணு

497 - காவி உடுத்தும்

498 - கோதிக் கோதி

499 - சகசம்பக் குடைசூழ்

500 - சகுட முந்தும்

501 - சாந்துடனே புழுகு

502 - சுடரனைய திருமேனி

503 - தத்தை மயில்

504 - துத்தி பொற்றன

505 - நாடா பிறப்பு

506 - நாலு சதுரத்த பஞ்ச

507 - நீலக் குழலார்

508 - பனி போலத் துளி

509 - மகரமொடுறு குழை

510 - மச்ச மெச்சு

511 - மதிய மண்குண

512 - மருவு கடல்முகில்

513 - மனமே உனக்குறுதி

514 - முத்த மோகன

515 - பரமகுரு நாத

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song